தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு
கனமழை எச்சரிக்கை


     தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வங்கக்கடலில் உருவாகின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் 11ம் தேதி கன மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

     மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகத்தை 11-ம் தேதி அதிகாலை வந்தடையும். நவம்பர் 10, 11-ந் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறையலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்

     நவம்பர் 10-ந் தேதி கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு அலர்ட்

     சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

     சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு,நெல்லை,தென்காசி, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

     தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம்,விருதுநகர்,தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை,நாகை,கடலூர்மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.